ஒரே நாளில் 40 சிறை கைதிகள் விடுதலை!!

 
tn

அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரே நேரத்தில் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

cbe jail

மறைந்த முன்னாள்  முதல்வர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அத்துடன் 75ஆவது சுதந்திர  தினத்தை ஒட்டி நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்து இருந்தது.  அதன்படி நீண்ட  நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளில் விதிமுறைகள் வகுக்கப்பட்ட,  10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளின் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில்  ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

jail
இதையடுத்து தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைகளிலிருந்து தேர்வான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 40 கைதிகள் விடுதலை ஆகினர். முன் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிறகைதிகள் வரும் நாட்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.