ஈரோடு இடைத்தேர்தல்- வரும் 23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 
vijayakanth

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 23 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவிருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதாக திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, ஈரோடு கிழக்கு தொகுதி தங்களுக்கே என அறிவித்துள்ளார். இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள 14 பேர் கொண்ட பணிக்குழுவையும் நியமித்தது.