"வெட்கத்தை விட்டு கூறுகிறேன், தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்' - அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி!!

 
ttn

மத்திய அரசுக்கு தமிழ்நாடு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்று  அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nehru

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, வெட்கத்தை விட்டு செல்கிறேன்.  தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்.  

ttn

பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.  அதிமுகவினரும்,   திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர்.  அதனால்தான் அதிமுகவை சேரவிடாமல் பாஜக முட்டுக்கட்டை போடுகிறது என்றார்.