#BREAKING ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திக்குத்து!

 
tn

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள  தனியார் மண்டபத்தில் கூடுகிறது.  இதனால் காலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  அதிமுக பொது குழுவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு புறப்பட்ட நிலையில்,  ஓ.  பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு புறப்பட்டார்.

tn
இதனிடையே அதிமுக அலுவலகத்திற்கு முன்பு தொண்டர்கள் கூடினர்.  அத்துடன் அதிமுக அலுவலகத்திற்கு ஏற்கனவே பூட்டு போடப்பட்டிருந்த  நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. , ஓ பன்னீர்செல்வம் வருகையால் அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் ஹெல்மெட் அணிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.  அத்துடன் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அருகே இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

tn
இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலக வாயிலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு தொண்டர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் வருகை புரிந்துள்ளார்.  மோதலுக்கு இடையே அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் சென்றுள்ளார்.