#BREAKING தடையை மீறி அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ்

 
tn

அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து  ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார்.

tn

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:15 மணிக்கு நடைபெறுகிறது.  முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ops

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே சென்ற நிலையில் தடையை மீறி ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருகை புரிந்த அவர், ரகளைக்கு மத்தியில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.  அத்துடன் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கற்களை  வீசி தாக்கி கொண்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.