விடுமுறை அளித்த 987 தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை!!

 
directorate-of-matric-schools - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம்

விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்  தெரிவித்துள்ளது.

school reopen

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு பள்ளிகள் இயங்கப் போவதில்லை என்று அறிவித்தது.  ஆனால் பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்து இருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 18ஆம் தேதி  11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே விடுமுறையை அறிவித்திருந்தது. மீதமுள்ள 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 

school

இதன் காரணமாக அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள் விளக்கம் தர வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் 18ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதிலாக ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கம் ஏற்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.