நித்தியானந்தாவுக்கு விஷம்... கொல்ல முயற்சி?

 
ni

நித்தியானந்தாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாகவும் அவரது பக்தர்களிடையே சந்தேகம் எழுந்திருக்கிறது. 

 திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதி  அருகே ஆசிரமம் அமைத்து உலக அளவில் கிளைகள் பரப்பி பிரபலமாக இருந்தார். அடுத்தடுத்து இவர் பாலியல்  புகார்களில் சிக்கியதை அடித்து வழக்குகள் இவரை நெருக்கியதை அடுத்து தலைமறைவானார்.  

nii

பாலியல் புகார் மட்டுமல்லாது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அவர் நியமிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது.  அது மட்டுமல்ல  தமிழகத்தின் பெரும்பாலான மடங்களில் தனது ராஜ்ஜியத்தை பரப்ப எண்ணி அதற்காக எடுத்து வந்த முயற்சிகள் பெரும் சர்ச்சையானது . 

கர்நாடக போலீசார் இவரை தேடி வரும் நிலையில்,  தமிழகத்திலும் இவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்.   கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அவரே தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தார்.  தென் அமெரிக்காவின் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தலைமறைவாக இருக்கிறார் நித்தியானந்தா என்றும் தகவல் வந்தன.

 இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு இருப்பதாக புகைப்படங்கள் வெளிவந்தன.  தனக்கு நானூருக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.   ஆனால் அவர்களால் தனக்கு என்ன வியாதி என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.   தன்னை நோய் கடுமையாக வாட்டுகிறது என்று அவரே தொடர்ந்து அவரது  பக்தர்களுக்கு கடிதம் எழுதி வந்தார்.

t

 அண்மையில் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று இலங்கை அரசிடம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இலங்கைக்கு வர அனுமதி கோரி இருந்தார் நித்தியானந்தா.   நல்ல ஆரோக்கியத்துடன் வீடியோக்களில் பேசி வந்த நிலையில் திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்று?  இந்த அளவிற்கு உடல்நிலை மோசமானது ஏன்? என்பது குறித்து அவரது பக்தர்களிடையே சலசலப்பு எழுந்திருக்கிறது. 

 நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்துக்கள் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி உள்ளன என்று சொல்கிறார்கள்.   உலகம் முழுவதிலும் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உள்ளதால் அவருடன் உள்ளவர்களும் அவரை சார்ந்தவர்களும் அந்த சொத்துக்களை அனுபவிக்க நித்தியானந்தாவை கொல்ல முயற்சித்துள்ளனர்.   அதனால் அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது .  அதனால் தான் அவர் தொடர்ந்து நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் என்று அவரது பக்தர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

 நித்தியானந்தா உடன் நெருக்கமாக இருப்பவர்களே அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று பக்தர்களிடையே சந்தேகம் எழுந்திருக்கிறது.