தேவி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகை நயன்தாரா!

 
Nayanthara

தனது நடிப்பில் திரைக்கு வந்துள்ள ' காத்து வாக்குல ரெண்டு காதல் ' திரைப்படத்தைக் காண சென்னை அண்ணாசலை தேவி திரையரங்கிற்கு வருகை தந்த நடிகை நயன்தாராவைப் பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

நயன்தாரா

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 28ம் தேதி 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் திரைக்கு வந்தது. இதில் நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் bmw காரில் ஒன்றாக தேவி திரையரங்கிற்கு வருகை தந்தார் . மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் வருகை தந்தார் . 

நயன்தாரா திரையரங்கிற்கு வரும் செய்தியறிந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர், நயன்தாராவின் காருக்கு மலர் தூவி வரவேற்பளித்த ரசிகர்கள் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும், அவருடன் செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் திரையரங்கு  வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.