தேசிய பத்திரிக்கையாளர் தினம் : ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து..

 
தேசிய பத்திரிக்கையாளர் தினம் : ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து..

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி  தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்.  பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

rn ravi

இதேபோல்  ஓ.பன்னீர்செல்வம்  தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவை பத்திரிகைகளும், ஊடகங்களும். "மனத்தூய்மையுடன் இருப்பதே உண்மையான அறம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பொதுமக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக, அற வழியில் தைரியத்துடனும், நேர்மையுடனும் செய்திகளை சேகரித்து வெளியிடுவதோடு, ஜனநாயகம் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எனது தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.  

ops

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும். ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.