மாணவர்கள் ஏமாற வேண்டாம் - தேசிய ஹோமியோபதி ஆணையம் எச்சரிக்கை

 
Homeo


நீட் எழுதாமலேயே BHMS, MD( Hom ) படிப்பில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிப்பு வெளியிடும் கல்லூரிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என தேசிய ஹோமியோபதி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய ஹோமியோபதி ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில ஹோமியோபதி கல்லூரிகள், நீட் தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பின் ஏதும் காலியிடம் இருப்பின் அதில் நீட் எழுதாத மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று சில உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. நீட் எழுதாமலேயே BHMS, MD ( Hom ) படிப்பில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிப்பு வெளியிடும் கல்லூரிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரிகளின் அறிவிப்பை நம்பி சேர்ந்தால், பின் சேர்க்கைக்கான அங்கீகாரம் கிடைக்காது. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், தேசிய ஹோமியோபதி ஆணையம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.