"அண்ணாமலையால் தான் பயங்கரவாத சதி வெளிவந்தது" - அமைச்சருக்கு நாராயணன் திருப்பதி பதிலடி

 
ttn

என்ஐஏ விசாரிக்க வேண்டியது அண்ணாமலையை அல்ல  என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். 

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில்,  "புலன் விசாரணை தொடங்கும் முன்பே, சில  தகவல்களை அண்ணாமலை வெளியிட்டது எப்படி? உயிரிழந்த நபர்கள் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு முன் கூட்டியே எப்படி தெரியும்? அதனால் என் ஐ  ஏ அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்"  -  இன்றைய முரசொலியில் செந்தில் பாலாஜி.

க்க்

மே, 31, 1991 தேதியிட்ட முரசொலியை பாருங்கள். 'ராஜிவ் காந்தி கொலையாளி சிவராசன் படத்தை தமிழக காவல் துறை கத்தரித்து வெளியிட்டதாக செய்தி  குறிப்பிட்டதோடு  முரசொலி வெளியிட்ட செய்திகள் துப்பு துலக்க எந்த அளவு பயன்படுகிறது என்பதை பொதுமக்களும், நடுநிலையாளர்களும் உனர்வார்கள் என எண்ணுகிறோம்' என்று ஒரு பக்கத்து முரசொலி செய்தியின் படி, புலன் விசாரணை தொடங்கும் முன்பே, சில  தகவல்களை முரசொலி வெளியிட்டது எப்படி? நான்காவது நபர் குறித்த தகவல்கள் முரசொலிக்கு முன் கூட்டியே எப்படி தெரியும்? ராஜிவ் கொலையாளி சிவராசனை முரசொலிக்கு முன்பே எப்படி தெரியும்? என்ற கேள்விகளுக்கு முரசொலி பதில் சொல்ல வேண்டும்.



முரசொலி செய்தியால் மேலும் துப்பு துலக்க முடியும் என்று குறிப்பிட்ட முரசொலிக்கு ஒரு செய்தி.  'சிலிண்டர் வெடிப்பு' என்று சித்தரிக்கபட்டு கொண்டிருந்த கோவை சம்பவம்   அண்ணாமலையின் செய்தியால் தான் பயங்கரவாத சதி என்ற துப்பே  துலங்கியது. என் ஐ ஏ விசாரிக்க வேண்டியது அண்ணாமலையை அல்ல. தமிழக உளவுத்துறையின் தோல்வியைத் தான் என்பதை செந்தில் பாலாஜி தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , தமிழ்நாடு பாஜக தலைவருக்கு அடிப்படை அறிவோ, பக்குவமோ இல்லை. என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே, சம்பவம் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அண்ணாமலைக்கு தகவல்களை கொடுத்தது யார் என என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.