டாஸ்மாக்கில் விற்கப்படுவது கோவில் தீர்த்தமா? - சீமான் கேள்வி

 
stalin seeman

குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை மட்டும் தான் போதைப்பொருட்களா?. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது மகனுக்கு மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறினார். குஜராத் மாடல், டெல்லி மாடல் என்பதை போல் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ்மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும். ஜி.எஸ்.டி., நீட், சி.ஏ.ஏ. போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சிதான். இதனால் தான் காங்கிரஸ் கட்சியால் எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். அப்போது போதைபொருட்கள் பயன்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்து பேசிய சீமான், குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என்பதை முருகன் மீது ஆணையாக ஒத்துக்கொள்கிறேன். அதுமட்டும் தான் போதைப்பொருட்களா?. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? அதனையும் தடை செய்ய வேண்டியதுதானே என்றார்.