ஒரு வியாபரிக்கு பிரச்சனை என்பதற்காக வீடுகளை இடிப்பதா ? - சீமான் கேள்வி

 
Seeman

ஒரு வியாபாரிக்கு பிரச்சனை என்பதற்காக நூற்றுக்கணக்கான வீடுகளை இடிப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை ஆர்.ஏ.புரம்  கோவிந்தசாமி  நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது: இவ்வளவு காலமாக எல்லா உரிமையும் இந்த பகுதிமக்களுக்கு கொடுத்து விட்டு தற்பொழுது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள் ? ஒரு வியாபரிக்கு பிரச்சனையாக இருக்கு என்று இந்த இடத்தை இடிக்கின்றனர்..

seeman

முதல்வர் மாற்று இடம் கொடுத்தாலும் இந்த இடத்திற்கு என்ன குறைச்சல்? இந்த இடம் ஆக்கிரமிப்பே கிடையாது.. கோர்ட் நிறைய தீர்ப்பு கொடுக்கிறது.. அதை  அரசு செயல்படுத்தி இருக்கிறதா? தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை சரியாக பயன்படுத்தவில்லை.. அரசு தானே இந்த இடத்தை ஒதுக்கி  கொடுத்து உள்ளது. சாஸ்த்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்தை கோர்ட் உத்தரவு படி இடித்தார்களா ? இங்கே கேட்க ஆள் இல்லை என்று இடிக்கிறார்களா ? பாதி நீதி மன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டு உள்ளது.வழக்கு தொடுத்த வியாபாரி நிலுமும் கபாலீஸ்வரர் கோவில் நிலம் என்று தெரிவிக்கிறார்கள். இதை  அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய வேண்டும்.இவர்களுக்கு மாற்றாக பெருங்குடி ஈஞ்சம்பாக்கம் என்று கொடுப்பது ஏற்புடையது அல்ல, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.