தமிழகத்தில் என்ஐஏ சோதனை நிறைவு - 10 பேர் கைது

 
nia

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவடைந்தது. 

நாட்டின் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,  எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி தருவது  தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நிர்வாகிகள் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை ,திண்டுக்கல் ,கடலூர் ,தேனி, ராமநாதபுரம், தென்காசி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து நாளை கேரளாவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.