ரகசிய தகவல் - தமிழகத்தில் 45 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

 
nia

சென்னை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நாகப்பட்டினம்  ஆகிய 5 மாவட்டங்களில்  45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   கோவை கார் வெடிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் பரவுகின்றன.

கோயம்புத்தூரில்  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார்.   விசாரணையில் அவர் பெரும் சதி திட்டத்துடன் செயல்பட்டதும்,  ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் கண்டறியப்பட்டது.  இதன் பின்னர்  முபினுடன் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.  தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை  சோதனை நடத்தி இருக்கும் நிலையில் மீண்டும் சோதனை தொடங்கி இருக்கிறது.

c

 கோவை உக்கடம் அடுத்த புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இணைந்து வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் . 

என்.ஐ.ஏவுக்கு கிடைத்த ரகசிய தகவல் ஆவணங்களின்அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தகவல் கசிந்துள்ளன.  இந்த சோதனையை முன்னிட்டு அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இதே போல் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும்  என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 45 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.