”கோயில் நிலங்களுக்கு குத்தகை செலுத்தவில்லை எனில் விவசாயிகளை வெளியேற்றும் அறநிலையத்துறை”

 
mutharasan

கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், குத்தகை விவசாயிகளை வெளியேற்றக்கூடிய நிலையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல அதிமுக...' -முத்தரசன் விமர்சனம் |  nakkheeran

மயிலாடுதுறையில் வழிபாட்டு தலங்கள், தர்மஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திரம் நிலங்களில் குத்தகை சாகுபடியாளர்கள், குடியிருப்போர் நில உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய  இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் இருந்தது போன்றே பகுதி முறையை மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர வேண்டும்.  கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மடங்கள், தர்மஸ்தாபனங்கள், கோயில் போன்றவற்றின் நிலங்களில் பரம்பரை பரம்பரையாக குத்தகை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் குத்தகை செலுத்தவில்லை என்றால் நேரடியாக அறநிலையத்துறைக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் போல அறநிலையத்துறை வழக்குகளை நடத்தி குத்தகை விவசாயிகளை வெளியேற்றக்கூடிய அபாயகரமான நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. இம்முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். 

இயற்கை சீற்றம் ஏற்படும்போது விவசாயம் பாதித்தவர்கள் குத்தகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அவற்றை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோயில் நிலங்களில் குடியிருப்போர், குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.