‘8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்’ - குரூப் 4 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

 
டிஎன்பிஎஸ்சி

நாளை நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையம் வெளியிட்டுள்ளது.  

7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 22 லட்சத்து  02 ஆயிரத்து 942 பேர் எழுத உள்ளனர்.  7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை கண்காணிக்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள்  தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

குரூப் 4 தேர்வு

இந்நிலையில் தற்போது நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையம் வெளியிட்டுள்ளது.   அதில்,

➤காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும்; 9 மணிக்கு OMR தாள்கள் வழங்கப்படும்

➤12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது

➤முகக்கவசம் கட்டாயம்

➤OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்

 ‘8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்’ - குரூப் 4 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

➤OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது

➤விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் குறிக்க வேண்டும்

➤ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது  

➤முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் ” என்று தெரிவிக்கப்படுள்ளது.