முல்லைப் பெரியாறு -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு
Nov 16, 2022, 10:17 IST1668574033624
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது. அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு அந்த மனுவில் கோரி இருக்கிறது.
வள்ளக் கடவு வழியாக செல்ல 5 கிலோமீட்டர் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.