சதுரங்க பார்டர் உள்ள வேட்டி அணிந்து வந்தார் பிரதமர் மோடி

 
modi

இந்திய பிரதமர் மோடி 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்தார். 

modi

அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு,முன்னாள் மத்திய அமைச்சா் தயாநிதிமாறன் எம்பி, தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு,சென்னை மாநகர மேயா், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஏசி சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட 22 போ் வரவேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கிவைக்க நேரு விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமர் மோடிக்கு செஸ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் காத்திருந்த பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடி சதுரங்க பார்டர் உள்ள வேட்டி அணிந்து வந்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு, வேஷ்டியுடன் விழாவுக்கு வந்திருப்பது குறிப்பிடதக்கது.