பொங்கல் பரிசு; முழு கரும்பு ரூ.33-க்கு கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி

 
minister sakkarapani

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவையில் 2,400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா… அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சக்கரபாணி, "ரூ. 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகைக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

அனைத்து மாவட்டங்களிலும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 100 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.

கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும்  தரமானதாக இருக்கும். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 19269 நபர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்பட உள்ளது.ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு  பெற முடியாதவர்களுக்கும்,வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ஜனவரி 13ம் தேதியும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.