உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது - அமைச்சர் அட்வைஸ்!

 
ma subramanian

நீட் தேர்வுக்கு அஞ்சி உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

masu

மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா சென்னையில் இன்று துவக்கிவைத்தனர். சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமான ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் திட்டம் சென்னையில் உள்ள 8 இடங்களில், நடைபெறுகிறது.  இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் 2வது அவென்யூவில், உள்ள பிரதான சாலை 800 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லாத வகையில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது.

masu

இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை வாகனங்கள் செல்லாத வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு, பல விளையாட்டு நிகழ்வுகள்  இங்கு நடைபெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சிக்கும், மகிழ்வான வாழ்வுக்கும் இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டு. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன். உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது . மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.