தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

 
senthil balaji

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திமுக அரசின் நல்லாட்சியில் 2020-2021ம் ஆண்டில் 12,555 மில்லியன் யூனிட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தியை, 565 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து 2021-2022 ஆண்டில் 13,120 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது தமிழக மின்சார வாரியம். 2020-2021 ஆண்டில் 1,06,943 மில்லியன் யூனிட்களாக இருந்த மாநில மொத்த மின் நுகர்வு 2021-22ம் ஆண்டில் 9.65 சதவீதம் அதிகரித்த போதும், 1,17,261 மில்லியன் யூனிட்களை வினியோகித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  வரலாறு படைத்துள்ளது. 2020-21-ல் 61,155 மில்லியன் யூனிட்டாக இருந்த சூரிய ஒளி மின் உற்பத்தியை 1088 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து, 2021-2022ம் ஆண்டில் 7,203 மில்லியன் யூனிட்களாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.