அரசு நிலங்களை மீட்டெடுக்கும் சட்ட நடவடிக்கை தொடரும் - அமைச்சர் பேட்டி

 
sekar babu

தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு 57-க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில், நாடக கொட்டாய்க்கு சொந்தமான 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்த இடம் மீட்கப்பட்டது. இந்நிலையில், மீட்கப்பட்ட நாடக கொட்டாய் இடத்தினை தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

sekar babu

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பிறகு அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-  இங்கு அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் 487 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு 90 சதவீதம் அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது. தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களைக்கூட நிறுத்தவில்லை. இவ்வாறு கூறினார்.