வேறு வழியில்லை.... மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் ஆகுங்கள் - அமைச்சர் பொன்முடி பேச்சு

 
Ponmudi

நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அரசு கல்வி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னையில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அரசு கல்வி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் மொழி பாடத்திட்டத்தில் கட்டாயம் ஆக்கக் கூடாது. தமிழ் ஆங்கிலம் இருமொழி முக்கியம். தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் இருக்க வேண்டும். மாணவர்களை புத்தக பூச்சிகளாக மாற்றிவிட வேண்டாம். தொழில் பயிற்சியில் ஆர்வம் உடையவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்