மனநல சேவைக்காக 14416 என்ற புதிய எண் அறிமுகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 
Ma Subramanian

மனநல சேவைக்காக 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக  தமிழக மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மனநல சேவை மையத்தை தமிழக மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனநல ஆற்றுதல் படுத்தும் சேவை, வீடியோ பதிவு ஆலோசனை தொடர்ச்சியான வழிகாட்டு முறைகள் மனநல சேவை வழியாக அளிக்கப்படும். ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. அதுபோல மன உளைச்சல் கொண்டவர்களுக்கு அதற்கான தீர்வு இதன் மூலம் வழங்கப்படும். இந்த மையத்தில் மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுதல்படுத்துபவர்கள் செயல்படுவார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துவமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்காக அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.