காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு - அமைச்சர் பேட்டி

 
Geetha jeevan

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்த அவர் தரமாக இருப்பதாக கூறினார்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் உன்னதமான திட்டம். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2023 -2024 -ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருந்தே இங்கு தயாரிக்கப்படும் உணவு கொண்டு செல்லப்படும் விதம், மாணவர்களுக்கு சாப்பாடு வழங்குவது உட்பட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.