டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு

 
ev velu

டெண்டர் பணிகள் முடிவடையாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா வேலு பேசியதாவது: பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது. ஆனால் கண்டிப்பாக மில்லிங் முறை செய்து தான் சாலைகள் அமைக்கப்படுகிறது.6 அடிக்கு மேல் உள்ள  மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம் - உயராமான மரக்கன்றுகள் தான் சாலையில் வைக்கப்பட்டு வருகிறது.

velu

டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம்.  அதிமுக திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிற ஜெயக்குமாரின்  கருத்துக்கு, நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கருணாநிதி. கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி. அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும். இவ்வாறு கூறினார்.