அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

 
duraimurugan

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு திடீர் உடல்நலக்குறவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  

இந்நிலையில், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.