அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்ட அவகாசம்! விசாரணையின் இடைக்கால தடை நீட்டிப்பு

 
a

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீடித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் வாதத்திற்கு பதில் அளிக்க அனிதா தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து தடை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 கடந்த 2002ம் ஆண்டில் இருந்து  2006 ஆம் ஆண்டு வரைக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை  2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

hr

 இந்த நிலையில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த அமலாக்கப் பிரிவு,   அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.   அத்துடன் அனிதா ராதாகிருஷ்ணன் , அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஆறு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

 சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும் தனக்கு எதிராக அவளாக்கப் பிரிவு பதிவு செய்திருக்கும் வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.    இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது .  

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. அதற்கு, பதில் அளிக்க அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு அவகாசம் கோரியது.   இதையடுத்து வழக்கின் விசாரணைக்கு விதித்த தடையை ஜூலை 28ஆம் தேதி வரைக்கும் நீட்டித்துள்ளனர் நீதிபதிகள்.