நீட் தேர்வு அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவ கட்டமைப்பு சீரழித்து விடும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

கல்வியை வியாபாரமாக்க தான் நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு அடுத்த பத்தாண்டுகளில் மருத்துவ கட்டமைப்பு சீரழித்து விடும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவர் அணியின் சார்பாக கல்வி, சமூகநீதி கூட்டாச்சித் தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தின் முதல் உழைப்பாளி தமிழக முதலமைச்சர் தான். நீட் உள்ளிட்ட எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத ஒரு அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது.

anbil

திரிபுராவில் 3500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில்,88,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 12000 தேர்வு எழுதிய நிலையில் 37000 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று முடிவுகள் வருகிறது. இதுபோன்று மத்திய அரசே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் தான் தமிழக முதல்வர் இதை பலிபீடம் என சொல்கிறார், சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், சில மாணவர்கள் சிறைக்கு செல்கின்றனர் என்றார். இலவச மருந்துவங்களை அளிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் மருத்துவத்தை வியாபாரமாக்க வேண்டும் என்று தான் நீட்டை கொண்டு வர முற்படுகிறார்கள். நீட் வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி என்பது சீரழிந்து விடும். இவ்வாறு தெரிவித்தார்.