5G ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? - ஆ.ராசா குற்றச்சாட்டு..

 
5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..


5G அலைக்கற்றை ஏலத்தில்   பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம் பியும்,   முன்னாள் மத்திய அமைச்சருமான ஆராசா குற்றம் சாட்டியிருக்கிறார்.

5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  அவர்,  “30மெகா  ஹெட்ஸ் அலைக் கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால் இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

 ஆ.ராசா
2ஜி, 3ஜி, 4ஜி ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 5 முதல் 6   லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய  அரசே கூறியது.  ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது என்பதால் டிராய் தலைவர் வினோத் ராய் யாருக்காக இதை செய்தார் என விசாரிக்க வேண்டும்.  மேலும், மத்திய அரசின் அமைச்சர் என்பதை மறந்து குறுகிய அரசியலில் நடந்து கொள்ளும் அமைச்சர்கள் மாநில கட்சியையும், மாநில அரசையும் குறிப்பிட்டு பேசுவது அவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மைக்குள் வந்து உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றும்  ஆ. ராசா தெரிவித்தார்.