" மே 2 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும்" - முதல்வருக்கு பறந்த கடிதம்!!

 
tn

தமிழகத்தில் மே 2 ஆம் தேதி  விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

tn

தமிழகத்தில் நாளை மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1ம் தேதி  உழைப்பாளர் தினத்தையும், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாட மக்கள்  தயாராகியுள்ளனர். இடையில் மே 2 ஆம் தேதி திங்கட்கிழமை ஒருநாளுக்காக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்படும். இதனால்   மே 2ம் தேதியை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

stalin

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் , " தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.

tn

அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.