அரசு பள்ளிகளில் இன்று மேலாண்மை குழு கூட்டம்

 
ட்

அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குநர் சுதன் இது குறித்து அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில்,  அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று 28. 10. 2022 பிற்பகல் 3 மணி அளவில் மாலை நாலு முப்பது மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். 

ட்

 இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உள் கட்டமைப்பு ,மேம்பாடு, கற்றல் மற்றும் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களின் செயல்பாடு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் .  மேலும்,   நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் .  

இந்த கூட்டத்தில் மேலாண்மை குழுவில் இருக்கும் ஆசிரியர், சமூக ஆர்வலர் , கவுன்சிலர் உள்ளிட்டவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.