மாட்டின் வாலை துண்டாக வெட்டிய நபர் கைது

 
cow

தூத்துக்குடி அருகே மாட்டின் வாலை  கொடூரமாக அறிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

pollachi women murder | அடையாளம் தெரியாத வகையில்...முட்புதரில் ரத்த  வெள்ளத்தில்...கிடந்த பெண்! - Search Around Web

தூத்துக்குடி அருகே ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான தோட்டம் சின்ன நட்டாத்தி பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டு பசு மற்றும் காளை மாடுகளை ஜெயராமன் வளர்த்து வருகிறார். இதில் ஒரு காளை மாடு அருகே உள்ள தென்னந்தோப்பில்  உள்ளே நுழைந்து மேய்ச்சலில்  ஈடுபட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த வன்னியனுர் பகுதியைச் சேர்ந்த வன்னிய ராஜ், தோட்டத்தில் மேய்ந்த காளை மாட்டின் வாலை கொடூரமாக அரிவாளால் வெட்டி துண்டாக்கியுள்ளார். இதையடுத்து மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற ஜெயராமன், ரத்தவெள்ளத்தில் கிடந்த மாட்டை மீட்டு சிகிச்சை அளித்தார். இதே போன்று அந்தத் தோட்டத்தில் ஏற்கனவே ஒரு மாட்டின் வால் மற்றும் காலையும் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெயராமன் மாட்டை கொடூரமாக வெட்டிய வன்னியராஜ் மீது சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் மாட்டின் வாலை கொடூரமாக வெட்டிய வன்னியராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தென்னந்தோப்பில் மேய்ந்ததற்காக மாட்டின் வாலை கொடூரமாக அறிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.