வருகிற 8ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு - ஏன் தெரியுமா?

 
madurai meenatchi amman temple

வருகிற 8ம் தேதி (செவ்வாய் கிழமை) சந்திரகிரகணம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சந்திரகிரகணம் வருகிற 8-ந் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும். மேலும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும். இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகிற 7-ந் தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.