வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..

 
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும்,  11ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம்  தேதி தொடங்கிய நிலையில்  தற்போது   பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  

18 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 9ம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசை நோக்கி நகரக்கூடும். இந்தனால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  தமிழ்நாட்டில் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.