சிறுத்தை உயிரிழப்பு விவகாரம்: வனத்துறை விசாரணைக்கு ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி.,

 
ரவீந்திரநாத் எம் பி

சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தேனி வனச்சரக வனத்துறையினர்,  தேனி எம்.பி. ரவீந்திரநாத்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி 2வயதுடைய ஆண் சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக  அவரது  தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தோட்ட மேலாளர்கள் தங்கவேல் மற்றும் இராஜவேல் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர்.

சிறுத்தை உயிரிழப்பு விவகாரம்: வனத்துறை விசாரணைக்கு ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி.,

அதனைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளரான எம்.பி ரவீந்திரநாத் ஆஜராகும்படி  வனத்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு ரவீந்திரநாத் நேரில் ஆஜராகாமல் அவர் சார்பாக வழக்கறிஞர்கள்  ஆஜராகி கடந்த  1ம் தேதி ஆஜராகி விளக்கக் கடிதம் வழங்கினர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி  வனத்துறையினர் நேரில் ஆஜராகும்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக ரவீந்திரநாத் எம்.பிக்கு  சம்மன்  அனுப்பியிருந்தனர்.

சிறுத்தை உயிரிழப்பு விவகாரம்: வனத்துறை விசாரணைக்கு ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி.,

அதனடிப்படையில், இன்று தேனியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி., விளக்கம் அளித்து வருகிறார். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  முதல் தடவை அவர் ஆஜராகாத நிலையில், 2வது முறையாக வனத்துறை  சம்மன் அனுப்பியதை அடுத்து   இன்று நேரில் ஆஜராகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின் ரவீந்திரநாத் அளிக்கும்  விளக்கத்தின் அடிப்படையில்  வனத்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.