விபத்தில் சிக்கிய கேரள பேருந்து - 10 பேர் காயம்!!
கேரள பேருந்து ஒன்று நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று கேரள அரசு பேருந்து பயணிகளுடன் மாலை வந்து கொண்டிருந்தது, பேருந்து நெய்யாற்றின்கரை அருகே கோவிலில் வெடிவச்சான் கோவிலில் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து சாலை ஓரமாக இருந்த கடைக்குள் பேருந்து புகுந்து கவிழ்ந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர் . கடைக்கு விடுமுறை என்பதால் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான பேருந்து நெய்யாற்றின்கரை பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லாதது நல்வாய்ப்பாக அமைந்தது எனலாம்.