காரைக்கால் சிறுவன் இறப்பு: விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்..

 
காரைக்கால் சிறுவன் இறப்பு: விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்..

காரைக்கால் அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் - மாலதி தம்பதியின்  இரண்டாவது மகன் பால மணிகண்டன்(13).   அதே பகுதியில் உள்ள தனியார்  பள்ளியில் 8ம் வகுப்பு படித்து  வந்த பால மணிகண்டன் படிப்பு,   விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில்  முதல் மாணவனாக இருந்து வந்துள்ளான்.   இதனால் அதே வகுப்பில் படித்து வந்த தனது மகளுக்கு போட்டியாக இருப்பதாக  கருதி  அச்சிறுவன் மீது, அந்த மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா பொறாமை கொண்டிருந்திருக்கிறார்.  இந்நிலையில் விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுவனின் உறவினர் கொடுத்ததாகச் சொல்லி   வாட்ச்மேனிடம் அவர் கொடுத்துள்ளார்.  வாட்ச்மேனும்  பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த  பால மணிகண்டனிடம் கொடுத்திருக்கிறார்.

காரைக்கால் சிறுவன் இறப்பு: விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்..

 அதனைக் குடித்த சிறுவன் வீட்டிற்கு வந்து பலமுறை வாந்தி எடுத்துள்ளான். அத்துடன் மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  இருப்பினும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அத்துடன் சகாயராணி விக்டோரியாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் காரைக்காலில் உள்ள சகாயராணியின் வீட்டை அடையாளம் தெரியாத நபர்கள் சூறையாடிச்சென்றுள்ளனர்.  

காரைக்கால் சிறுவன் இறப்பு: விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்..

இந்த நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள்,  பேட்டைக்காரன் தெருவில் உள்ள விக்டோரியாவின்  வீட்டை  அடித்து  சேதப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் காரணமாக அந்த வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை. வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் சிலர் வீட்டின் முன்பக்கத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  முன்னதாக  மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

காரைக்கால் சிறுவன் இறப்பு: விக்டோரியாவின் வீட்டை சூறையாடிய மர்மநபர்கள்..

அதன்பேரில்  சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர்  ஆகிய 3 பேர்  அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு  அமைத்து. இந்தக்குழு நேற்று மருத்துவமனையில் விசாரணை நடத்திய நிலையில், அந்த அறிக்கையை இன்று காலை  மருத்துவத்துறை இயக்குடரிடம் சமர்பித்தது.  இதனையடுத்து  மருத்துவத்துறை இயக்குனர்,  செயலாளரிடம்  ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து  இன்று மாலை அறிக்கை  வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.