கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீண்டும் சிறையிலடைப்பு!!

 
ttn

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

tn

இந்நிலையில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரையும் மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிபதி 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டு  அனுமதி அளித்தார்.  மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்த நிலையில் ஒருநாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதால் நேற்று மதியம் 12:30 மணி முதல் விசாரணை தொடங்கியது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்,  ஆசிரியர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.   இன்று மதியம் 12 மணி வரை விசாரிக்க அனுமதி தந்த நிலையில் ,  நேற்று இரவே  ஐந்து பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.