பேனா சின்னத்தை எதிர்ப்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி காட்டம்

 
ks

கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்ப்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே தமிழக அரசு சார்பில் 39 கோடி ரூபாய் செலவில் 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் நினைவிடத்தின் அருகே மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைக்கவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் சமீபத்தில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருணாநிதிக்கு மெரினாவில் சமாதி வைத்ததே பெரிது எனவும், யார் வீட்டு காசில் யாருக்கு சிலை வைப்பது எனவும் கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதவாது. கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை.  கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று கூறுபவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்தார்.