ஜூலை 31 கடைசி நாள்.. தவறினால் ரூ. 5,000 அபராதம் - வருமான வரித்துறை அறிவிப்பு..

 
tax

நாளை மறுநாளுக்கும் வருமான வரி கணக்கை  தாக்கல் செய்யவில்லையென்றால்  ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  

வங்கிக் கணக்கின் வழியாக  மாதம் ஊதியம் பெறுவோரும்,  தொழிம் முனைவோரும்,  வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை  தாக்கல் செய்ய வேண்டும்.  மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது   அவசியம். இது வருமான வரித்துறையால் வழக்கமான பின்பற்றப்படும் நடைமுறையாகும்.  இந்நிலையில்  கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று  காரணமாக  வருமான வரித் தாக்கல் செய்ய  டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  

tax

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல்  பெறும் ஒவ்வொருவரும்  வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.  அதிலும் , ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் இல்லை.  ஆனால் அதே ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானம் இருந்தால்  வரி விதிக்கப்பட்டு வருகிறது.  முன்கூட்டியே  வருமான வரி தாக்கல் செய்து விட்டால் , அவருக்கு அரசு  சலுகைகளையும்  வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2021 - 2022 ஆம்  நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் ( நாளை மறுநாளுடன்) முடிவடைகிறது. மெலும் கடந்த 2 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று  மத்திய அரசு திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.   

வருமான வரி கணக்கு தாக்கல்

 ஆகஸ்ட்  1 ஆம் தேதிக்கு பிறகு  சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.  ஆகையால் இதனை தவிர்க்க  வரிச் செலுத்துவோருக்கு செல்போன் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலை வருமான வரித்துறை  அனுப்பி வருகிறது.  மேலும்,  ஜூலை 26-ம் தேதி வரை ரூ.3.4. கோடிக்கும் அதிகமானோர்  வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும்,  கடந்த 26 -ம் தேதி மட்டும் ரூ.30 லட்சம் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. அத்துடன் தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு1000 ரூபாயும்,   ரூ.5 லட்சத்திற்கும்  அதிகமான  வருமான வரிக்கணக்கிற்கு  5000 ரூபாயும்  அபராதமாக வசூலிக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.