ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல - தினகரன் ட்வீட்

 
ttv

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய்,  நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த தீபாவளி, ரம்ஜான்,  கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிறு,  சிறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய்  வழங்கப்படவில்லை.  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாக குறைந்து போனதன் காரணமாக நெய்க்கும் மூலப்பொருளான வெண்ணைக்கும் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டு நெய்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல.



ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது.  இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் என்ன செய்யப்போகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.