புயலாக மாறுகிறதா 16ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி?
வரும் 16ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகம், கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது . இதனால் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி ,மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரைக்கும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக உள்ளது என்றும் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம் .
மேலும், லட்சத்தீவு பகுதிகள் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் உலகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.