பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? - வைகோ கேள்வி

 
vaiko ttn

பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? என்று மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ கேள்வி எழுப்பியதற்கு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

central

அ) உலகப் பத்திரிகை சுதந்திர வழிகாட்டுக் கொள்கையின்படி, ஊடக கண்காணிப்பு அமைப்பால் பராமரிக்கப்படும் 180 நாடுகளில், இந்தியா 30 இடம் பெற்றுள்ளது உண்மையா?
ஆ) அப்படியானால், பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான குறியீட்டிற்கான விரிவான காரணங்கள் யாவை?
இ) தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச துரோகச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் மூலம் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களது சுதந்திரத்தைப் பறித்து பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்களா?
ஈ) அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய அரசு மற்றும் பிர° கவுன்சில் மூலம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
உ) புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், ஆண்டு வாரியாக விவரங்கள் என்ன?

vaiko ttn

வைகோ  மேற்கண்ட கேள்விகளுக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் 28.07.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ) மற்றும் (ஆ):  உலக பத்திரிக்கை சுதந்திர வழிகாட்டுக் கொள்கை, ‘எல்லைகளற்ற பத்திரிகை நிருபர்கள்’ என்ற வெளிநாட்டு அரசு சாரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.   மிகக் குறைந்த மாதிரி அளவு, ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் இல்லா நெறிமுறை, கேள்விக்குரிய வெளிப்படையற்ற நெறிமுறை உள்ளிட்ட காரணங்களால் அரசு அதன் கருத்துகளையும் மற்றும் நாட்டின் தர வரிசையையும், முடிவுகளையும் ஏற்கவில்லை.
(இ) முதல் (உ) வரை: பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான கொள்கையின்படி, பத்திரிகையின் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடாது. பிர° கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ), ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பு ஆகும். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மற்றும் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு 1978 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் சட்டப் பிரிவு 13 மற்றும் 1979 ஆம் ஆண்டு பிர° கவுன்சில் (விசாரணைக்கான நடைமுறை) விதிமுறைகளின் கீழ் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிக்கையாளர்கள் மீதான உடல் ரீதியான தாக்குதல் / தாக்குதல் போன்றவற்றின் கீழ் 'பத்திரிகைகள்' தாக்கல் செய்த புகார்களை பிர° கவுன்சில் பரிசீலிக்கிறது. 2018-19 மற்றும் 2020-21 க்கு இடையில், 66 வழக்குகளில் பிர° கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்திரிக்கையாளர்கள் உட்பட நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சட்டத்தை கையில் எடுக்கும் எந்தவொரு நபரும் சட்டத்தின்படி உடனடியாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பத்திரிகையாளர்கள்/ ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு 2017 அக்டோபர் 20 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.