காஞ்சிபுரத்தில் உள்ள ஷாவர்மா கடைகளில் அதிரடி ஆய்வு

 
kanchi

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழ சம்பவத்தின் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ள ஷாவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  

இரு தினங்களுக்கு முன்பு கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்ட பின்னர் சுமார் 15 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள். ஷவர்மா சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11வது படிக்கும்  மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

kanchi

இந்த சம்பவத்தின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரங்கசாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். சவர்மா விற்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோழி கதைகள் பழைய கோழி கறியே பயன்படுத்துகிறார்களா? அல்லது அதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு கடைகளில் மாதிரிகளை பரிசோதனை கூடங்கள் அனுப்பப்பட்டு உடனடியாக முடிவு  தரத்தின் குறித்து மேற்கொண்டு வருகின்றனர். கடைகளில் பாதுகாப்பின்றி பிளாஸ்டிக் பயன்படுத்தி சவர்மா தயாரிக்கும் 10 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். 

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்திய சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.