இளையராஜா புறக்கணிப்பு... அம்பேத்கரும் மோடியும் புத்தக விழா...

 
r

டெல்லியில் நடந்த அம்பேத்கரும் மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை.  

 ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும் என்கிற ஆங்கில  நூலை வெளியிட்டது.   இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை வழங்கியிருந்தார்.   அந்த அணிந்துரையில்,  அம்பேத்கரை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது அவரது மதிப்பை உணர்ந்து அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  பிரதமர் மோடி அதைச் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.

இ

 இதற்காக திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.  இதன் பின்னர் இளையராஜா ராஜ்யசபா நியமன உறுப்பினராக பதவி ஏற்றார்.  அப்போதும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

 இந்நிலையில்   அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நேரு அருங்காட்சியகத்தில் இன்று 16ம் தேதி அன்று நடைபெற்றது . மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் நடந்த இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.  

இசையமைப்பாளரும் எம்பியுமான  இளையராஜா இந்த விழாவில் பங்கேற்கிறார் என்ற தகவல் முன்கூட்டியே பரவியது.  அதைத்தொடர்ந்து,  அம்பேத்கரும் மோடியும் நூலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதிய போது ஏற்பட்ட அதே சலசலப்பு பரபரப்பு தற்போது அவர் அம்பேத்கர் மோடியும் புத்தக
 வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் என்ற செய்தி வந்த போதும்  நிலவியது. ஆனால், இளையராஜா விழாவில் பங்கேற்கவில்லை.  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குஷ்பு, அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.