#BREAKING எடப்பாடி பழனிசாமியை நான் அதிமுகவில் இருந்து நீக்குகிறேன் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!!

 
tn

 அதிமுகவிலிருந்து ஈபிஎஸ்-ஐ நீக்குவதாக  ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

tn

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது . பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ. பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.  இதை அடுத்து அதிமுகவில் என்று ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் வைத்தியலிங்கம் , ஜேசிடி  பிரபாகர் , மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

ops

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவிலிருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. அவர்கள் இருவரையும் அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன். நீதிமன்றத்திற்கு சென்று தொண்டர்களுடன் இணைந்து உரிய நீதியை பெறுவோம் என்றார்