நான் பஸ் கடத்தல... ஜாமீன் வாங்கிய சூர்யா சிவா

 
ss

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி இருக்கிறது.   தனியார் பேருந்து கடத்தல் வழக்கில் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

 திருச்சி மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா .  இவரது மகன் சூர்யா சிவா, பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.  கடந்த ஜூன் 1ஆம் தேதி அன்று சூர்யா சிவா காரின் மீது தனியார் பேருந்து மோதியதை அடுத்து கார் சேதமடைந்ததால் காரை சீரமைப்பதற்கான செலவு தொகையை தனியார் நிறுவனம் வழங்கக் கேட்டிருக்கிறார்.   இது  காரை சீரமப்பிப்பதற்கான தொகையை வழங்காததால் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து ஜூன் 19ஆம் தேதி அன்று சூர்யா சிவா கடத்திச் சென்றதாக புகார் இருந்தது.

mkm

இதை அடுத்து திருச்சி கன்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா சிவாவை கைது செய்தனர்.   இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.   பேருந்து மோதி சேதமடைந்த எனது காரை சீரமைப்பதற்கான செலவு தொகை 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சர்வீஸ் சென்டருக்கு வழங்க வேண்டும் என்று முதலில் தனியார் பேருந்து நிறுவனத்தினர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் பணம் தர மறுத்து விட்டார்கள்.  இதனால் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் என்னிடம் போனில் பேசி மொத்த செலவில் 60% பணத்தை செலுத்துமாறு சொன்னார்.  

 இதன் பின்னர் நான் பேருந்து நிறுவன உரிமையாளர் தொடர்பு கொண்டேன். அதற்கு அந்த பேருந்து நிறுவன உரிமையாளர் பணம் தர தாமதமாகும் அதுவரைக்கும் பணத்துக்கு உத்தரவாதமாக எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றை  உங்களிடத்தில் எடுத்துச் சென்று வைத்திருங்கள் என்று சொன்னார்.  அதன் பின்னர்தான் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்து என்னிடத்தில் வைத்திருந்தேன்.  ஆனால் பேருந்தை நான் கடத்தி விட்டதாக என்னை கைது செய்து விட்டார்கள்.   அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன்,  சூர்யா சிவாவுக்கு தினமும் காலை 10 மணிக்கு திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறார்.