குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன்

 
Murder

சென்னையில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மனைவி தனலஷ்மி(36) இவர்களுக்கு நேத்ரா(12) மகளும், பார்த்தசாரதி(10) மகனும் உள்ளனர். தியாகராஜன் பணிக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துடன் இருந்துள்ளார்.  நேற்று இரவு குடிபோதையில் இருந்த தியாகராஜன் மனைவி தனலஷ்மியுடன் சண்டையிட்ட நிலையில், சிறிய கத்தியை கொண்டு இடது விலா பகுதியில் குத்தியுள்ளார். இதனால் ரத்தகாயத்துடன் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி  இரவு உயிரிழந்தார்.

தகவலறிந்த கண்ணகிநகர் போலீசார் தலைமறைவான தியாகராஜனை பாலவாக்கத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குடிபோதை கணவரின் வெறிச்செயலால மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் மகள், மகன் ஆகிய இருவரும் பெற்றோர் இல்லாமல் ஆதரவற்று நிற்கும் நிலை ஏற்பட்டது.